Tuesday 17 July 2012

நெகனூர்பட்டி தமிழ் பிராமிக் கல்வெட்டு


நெகனூர்பட்டி [தென்னார்க்காடு மாவட்டம்,செஞ்சி வட்டம்] தமிழ் பிராமிக் கல்வெட்டு


இடம்-நெகனூர்பட்டி [தென்னார்க்காடு மாவட்டம்,செஞ்சி வட்டம்] மேற்கே உள்ள ‘அடுக்கண்கல்’என்ற குன்றின் கீழ் அடுக்கில் இயற்கையாக அமைந்துள்ள குகையின் கூறைப்பகுதியில் விளிம்பில் இக் கல்வெட்டு உள்ளது.இக்கல்வெட்டு உள்ள குகையில் சமணர்களின் படுக்கைகள் இருந்ததற்கான தடயங்கள் உள்ளன.
காலம்-கி.பி 3-4 ஆம் நூற்றாண்டு
கண்டுபிடித்தவர்-கல்வெட்டறிஞர் சு.இராசவேலு,சென்னை.
கல்வெட்டிலுள்ள செய்தி
1. பெரும்பொகய்
2. செக்கந்தி தாயியரு
3. செக்கந்தண்ணி செ
4. யிவித்த பள்ளி
பொருள்-பெரும்பொகை என்ற ஊரைச் சேர்ந்த செக்கந்தி என்பவரின் தாயார் செக்கந்தண்ணி என்பவள் செய்த பள்ளியை இக் கல்வெட்டுக் கூறுகிறது என்று சு.இராசவேலு கூறுகிறார்.
 நன்றி-தமிழகத்தொல்லியல் கழகம்-ஆவணம் இதழ்,6.


0 comments:

Post a Comment