Wednesday 11 July 2012

எகிப்து நாட்டில் கிடைத்துள்ள தமிழில் எழுதிய தாழி


 
    எகிப்து நாட்டில் கிடைத்துள்ள தமிழில் எழுதிய தாழி 
கி.பி 60 இலிருந்து-கி.பி 70 ஆண்டளவிலான தமிழில் எழுதிய தாழி எகிப்து நாட்டில் கிடைத்துள்ளது.எகிப்து நாட்டில் செங்கடல் கரையில் ரோமானியர் காலத்தில் பெரெனிகெ என்ற பழந்துறைமுகம் இருந்தது.1994-95 இல் அங்கு நடைபெற்ற அகழ்வாய்வில் கிடைத்த மதுச்சாடிச் துண்டில் தமிழ் மொழியில்
தமிழ்-பிராமி எழுத்துக்களிலான சொற்கள் கண்டறியப்பட்டன.மதுச்சாடி துண்டின் நீளம் 19.2 செ.மீ.,அகலம் 14.3 செ.மீ ஆகும் உடன் ரோமானிய நாணயமும் கிடைத்துள்ளன.இவ்வகழ்வாய்வினை டெலாவேர்
பல்கலைக் கழகமும்,லெய்டன் பல்கலைக்கழகமும் இணைந்து நடத்தின. இவகழ்வாய்வின் முதல்வர் பேரசிரியர் ஸ்டீவன் ஸைட்பாதம், அறிஞர் அய்ராவதம் மகாதேவன் அவர்களுக்கு சாடியின் புகைப்படத்தை
அனுப்பிதால் அதனை ஆய்ந்து பிராமி எழுத்துக்களைக் கண்டறிந்து தமிழுக்குப் பெருமைச்சேர்த்தார்.
அவற்றிலுள்ள சொற்கள்
’’கொற பூமான்’’
இதனைக் ‘’ கொ[ற்]ற[ப்]பூமான்’’ என வாசிக்க வேண்டும் என்று அறிஞர் அய்ராவதம் மகாதேவன்கூறுகிறார்.தமிழ் கல்வெட்டுக்களில் பெரிதும் மெய்யெழுத்துக்கள் இரட்டித்து எழுதுவதில்லை. றகர,னகரங்களைப் பயன்படுத்தி இச்சொற்கள் தமிழில் எழுதப்பட்டுள்ளன.சங்க காலத்தில் தமிழகத்திற்கும் ரோமாபுரிக்கும் கடல் வணிகம் செழித்திருந்தது என்பதற்கு இது ஆதாரமாகும்.
              கருத்திற்கான நன்றி-தமிழகத் தொல்லியல் கழகம் ஆவணம்-இதழ் ,1998

0 comments:

Post a Comment