Sunday 15 July 2012

அழகன்குளம் அகழ்வாய்வில் பிராமி எழுத்துக்கள்


அழகன்குளம் அகழ்வாய்வில் பிராமி எழுத்துக்கள்


இடம்-[படம் எண்கள் 1-2-3]அழகன்குளம் அகழ்வாய்வில் கண்டறியப்பட்டது
காலம்-கி.மு 2 முதல் 5 ஆம் நூற்றாண்டினைச் சார்ந்ததாகலாம்.
கண்டறிந்தோர்-தமிழ்நாடு அரசு தொல்பொருள் ஆய்வுத்துறை
கிடைத்தவைகள்-கருப்பு சிவப்புப் பானையோடுகள் ரூலடெட் பானையோடுகள் கிடைத்துள்ளன.
[படம் எண்-1] பானையோட்டில் ‘’தானிய துவரைமா[ன்]’’
என்று பிராமி எழுத்துக்களால் பொறிக்கப்பட்டுள்ளது.
[படம் எண்-2] பானையோட்டில் எகிப்தியப் பிரமிடுகளில் காணப்படும் ஓவிய உருவங்களைப் போன்ற இரு பெண்ணுருவங்கள் ஒருவரைஒருவர் பார்த்தவண்ணம் நிற்கின்றனர்.ஒருத்தி நீண்ட குடுவை ஒன்றினை ஏந்தியவாறும்,மற்றொருத்தி தன்னுடைய இடக்கரத்தில் விசிறி அல்லது கண்ணாடி ஒன்றினை ஏந்தியவாரும் [படம் எண்-3] பானையோட்டில் பாய்மரத்துடன் கூடிய கப்பல் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது.
இடம்-[படம் எண்-4]  பூம்புகார் அகழ்வாய்வில் கிடைத்தது
பூம்புகார் அகழ்வாய்வில் கிடைத்தப் பானையோட்டில் பிராமி எழுத்தில் பிராகிருதி மொழியில் எழுதப்பட்டுள்ளது.’’[அ]ஹாப கே3தரோ’’ என்றிருக்கலாமென தொல்லியலறிஞர் நடன.காசிநாதன் கருதுகிறார்.நன்றி-தமிழகத்தொல்லியல் கழகம் ஆவணம்,இதழ்;9

0 comments:

Post a Comment